மிக உயர்ந்த ஆறுதலையும் அமைதியையும் அளிக்கிற வாழ்க்கை தத்துவம் என்ன???

#ஆறுதல் #அமைதி #வாழ்க்கை தத்துவம்

மிக உயர்ந்த ஆறுதலையும் அமைதியையும் அளிக்கிற வாழ்க்கை தத்துவம்,
*உலகின் நடக்கும் அனைத்து செயல்களும் நம் நன்மைக்கே*.

*நம் வாழ்க்கை அன்றாடம் நிகழும் அனைத்து செயல்களும் நன்மைக்கே.*

நன்மை, தீமை

நல்லது, கெட்டது

மகிழ்ச்சி, துன்பம்

சிரிப்பு, அழுகை

வெற்றி , தோல்வி

பிறப்பு , இறப்பு

செல்வம் , வறுமை

ஜனனம் , மரணம்

இப்படி. வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளும் நம் நன்மைக்கே.

இதை ஏற்றுக்கொள்ளும் மணப் பக்குவம் நமக்கு வர வேண்டும்.

எப்படி நன்மையும், மகிழ்ச்சி ஏற்றுக்கொள்ளும் இந்த மனம் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் மணப் பக்குவத்தை அடைய வேண்டும்.

ஒரு சிறிய தெரிந்த கதை

ஒரு நாட்டின் மன்னன் இருந்தான் அவன் அவையில் ஒரு சிறந்த மந்திரி இருந்தான் . அவர் மன்னன் அனைத்து நிகழ்வுகள் அனைத்திற்கும் அவர் சொல்லும் ஒரே வார்த்தை *எல்லாம் நம் நன்மைக்கே.* என்று சொல்லுவார்.

ஒரு நாள் மன்னன் பழம் வெட்டும் போது கை வெட்டி கொண்டார்.

அங்கு வந்த. மந்திரி மன்னன் பார்த்து

*எல்லாம் நன்மைக்கே* என்றார்.

கோபம் கொண்ட மன்னன் மந்திரியை சிறை செய்தான்.

சில நாட்கள் கழித்து வேட்டைக்கு சென்றான். ஒரு தருணத்தில் அனைத்து பரிவாரங்கள் தொலைத்து ஒரு அடர்ந்த காட்டில் தொலைந்து விட்டான்.

அந்த. வானத்தில் மனிதர்களை கொள்ளும் நர மனிதர்கள் மன்னனை சிறை பிடித்தார்கள். மறு நாள் காலை

மன்னனை பூஜை செய்து பழி கொடுக்க தயார் செய்து கொலை செய்ய முற்பட்டபோது , அவனை சோதனை செய்தபோது அவன் கையில் வெட்டு இருப்பது கண்டு காயம் பட்டு உள்ள உயிரை பழி இட கூடாது என்ற கோட்பாடு .



மன்னன் நாடு திரும்பினான் . உடனே அமைச்சரை சிறை மீட்டான். மன்னிப்பு கோரினான்.

*எல்லாம் அவன் செயல்* என்ற ஒரு தத்துவம்.

இதை நாம் உணர வேண்டும்.

*இதுவும் கடந்து போகும்*

இது ஒரு வாழும் பொழுது நம் அனைவரும் மனதில் இருக்க வேண்டிய கட்டாய பாடம்.

வாருங்கள் இன்னுமொரு கதை,

ஒரு மன்னன் முடி சூடுகிரான் . மிக சிறப்பான கொண்டாட்டம் நடைபெறுகிறது.

அப்போது அவர் அமைச்சர் மன்னன்
இடம் வந்து நான் ஒரு நான்கு ஓலை தருகிறேன் மிக கடினமான
நேரத்தில் மிக்க மகிழ்ச்சி, மிக்க துன்பம்
அந்த தருணத்தில் இதை நீ படிக்கவும்.

அன்று மன்னன் மிகவும் சந்தோசம் கொண்டு இருந்தான் . அப்பொழுது முதல் ஓலை எடுத்து படிதான் அதில் அந்த மந்திரச்சொல்

*இதுவும் கடந்து போகும்*

மன்னன் சிரித்தான் நாம் ஒரு சிறந்த வலிமை வாய்ந்த படை மற்றும் அனைத்து வளம் கொண்ட நாடு என்பது இது எப்படி கடந்து போகும் என்று அமைச்சரை எள்ளி நகைதான் .

ஒரு வருடம் ஓடியது அப்பொழுது பக்கத்து நாடு மன்னன் மிகப்பெரிய படை கொண்டு அந்த மன்னனை தோற்று காட்டில் தஞ்சம் அடைந்தான் .

அந்த இரவில் நாட்டில் தனியாக ஒரு மரத்தில் ஒளிந்து இருக்கும் போது மிக மன வருத்தம் கொண்டான். அப்பொழுது அவன் கசயில் மறைத்து வைத்து இருந்து ஓலையை எடுத்து படிதான்

அந்த மந்திர சொல்

*இதுவும் கடந்து போகும்*

அப்பொழுது தன்னை நினைத்து மனம் நொந்து எப்படி இந்த நிலைமை மாறும் என்று தன்னை நினைத்து சிரித்தான்.

காலை புலர்ந்தது அது அவன் நாட்டிற்கு உட்பட்டு உள்ள ஒரு காட்டு அரசன் .

இவன் மன்னனை கண்டு அனைத்து உதவிகள் செய்தார் அவன் உதவி கொண்டு பெரும் படை திரட்ட பகை மன்னனை வென்றான்.

பிறகு முடிசூட்டி கொண்டான் . மிக பெரிய நிகழ்ச்சி மன்னன் பெரும் மகிழ்ச்சி . அப்பொழுது வந்த அமைச்சர் மன்னனை கண்டு வணங்கினார்.

அப்பொழுது மன்னன் இன்னும் ஒரு ஓலை மிச்சம் இருக்கே என்று எண்ணி அதை எடுத்து படிதான்

அந்த மந்திர சொல்

*இதுவும் கடந்து போகும்*

இதுதான் வாழ்வின் தத்துவம்.

*எல்லாம் உன் கையில்*

வாருங்கள் மற்றும் ஒரு குட்டி கதை சொல்வோம்

ஒரு கிராமத்தில் ஒரு முனிவர் இருந்தார் ஒருவன் அவரை முட்டாள்
ஆக்க எண்ணினான்.

ஒரு வண்ணது பூச்சியை கையில் மறைத்து கொண்டு அவரிடம் சென்று ஐயா என் கையில் இருப்பது உயிரோடு
உள்ளதா அல்லது இறந்து விட்டதா என்று வினவினான்.

அவனின் திட்டம் முனிவர் உயிர் உள்ளது என்றால் அதை நசுக்கி விடுவது
அல்லது முனிவர் இறந்து விட்டது என்று சொன்னால் அதை அப்படியே பறக்க விடுவது என்று எண்ணினான்.

முனிவர் அனைத்தும் அறிந்த யோகியாயிற்றே. அவனிடம்

சிறிது கொண்டே அது *உன் கையில் உள்ளது* என்றார்.

அது போல் நம் வாழ்க்கை நம் கையில். அது சிறகடிக்கும் வண்ணத்து பூச்சி போன்றது

அதை நசுக்குவதும் இல்லை உயரே பறக்க விடுவது உங்கள் கையில்.

முடிவாக

~***இறைவா என்நிலையும் நினைப்பையும் சமப்படுத்து
முடிந்தால் என் நிலையை உயர்த்து
எக்காரணம் கொண்டும் என் நிலையை விட என்நினைப்பை உயர்த்தாதே*** ~

Post a Comment

Previous Post Next Post