*நினைவெல்லாம் நீதானடா......... 💘*

❤EVERY LOVE STORY IS BEAUTIFUL❤️

உங்கள்  இதயத்தை  தொடும் சிறுகதை
வாருங்கள்  கதைக்குள்  செல்வோம்..

கவிதா  வீட்டின் முன்பு பைக்   சீறிக்கொண்டு  வந்து  நிற்கின்றது.....

பாலா ஹெல்மெட்ஹை  கழட்டி  ஸ்டைலாக  பைக்கில்  இருந்து  இறங்கி  கவிதா  வீட்டிற்குள் நுழைகிறான்....

உள்ளே  கவிதாவின்  அப்பா பேப்பர்  படித்து  கொண்டு  இருக்கிறார்  அம்மா பூக்கட்டி  கொண்டு உள்ளார்....

பாலா : ஹாய்  அத்தை ......
அத்தை : வாங்க மருமகனே...
பாலா : என் பொண்டாட்டி  எங்க....
அத்தை : ரெடி ஆகிட்டு  இருக்ககா   பா
பாலா : இன்னுமா  ஒரு மணிநேரம் முன்னாடி  நான்  கால் பண்ணப்ப இதை  தான் சொன்னா
மாமா : அம்மாவுக்கும்  பொண்ணுக்கும்  இதான்  பா  வேலை
பாலா : ஹா ஹா ஹா

அத்தை  மாமாவை  பார்த்து  முறைக்க  நான்  கவிதா  அறைக்கு  சென்றேன்...

உள்ளே  அவள்  உடை  மாற்றி  கொண்டு  இருந்தால்...  ஜாக்கெட்  மற்றும்  பாவாடை  அணிந்து  கண்ணாடியை  பார்த்து  அலங்கரித்து  கொண்டிருந்தாள்


பாலா  அப்டியே சென்று  பின்னால்  அவளை  கட்டி  அணைத்து  இடுப்பில்  கிள்ளுகிறான்...

கவி  : டேய்  பொறுக்கி  வீட்ல  எல்லாரும்  இருக்காங்க  டா  விடு..
பாலா : ரொம்ப  நடிக்காத  டி  நா வரத  நீ  முன்னாடியே  கண்ணாடில  பாத்து தான் என்ன  கட்டிப்பிடிக்க  விட்ட  னு எனக்கு  நல்லா  தெரியும்....
கவி  : ( சிரித்துக்கொண்டே )சரி  விடு  டா  நேரம்  ஆகுது  டிரஸ் மாத்திட்டு  கடைக்கு  போனும்  ல....
பாலா : நா  புடவை  கட்டி  விடவா...
கவி :  உனக்கு  தெரியுமா...
பாலா  :  சொல்லிகுடு கத்துக்குறன்
கவி  : sir  கு  புடவையை  அவுக்க  தெரிஞ்சா  போதும்  கட்ரதெல்லாம் நான்  பாத்துக்குறேன்.
பாலா : கேடி  பாப்பா......



அடுத்த  வாரம்  இவர்களுக்கு  திருமணம்  நிச்சயிக்கப்பட்டுள்ளது...

இரண்டு வீட்டு  பெற்றோர் சம்மதத்துடன்  நடக்க  போகும்  காதல்  திருமணம்.................

இப்போது  இருவரும்  தயாராகி  பைக்  இல்  ஏறுகின்றனர்....

பாலா   பைக்  ஓட்டுவதில்  வல்லவன்   அவன்  வண்டியை  தொட்டால்  வண்டி  சீறிக்கொண்டு  பறக்கும் ..  உண்மையை சொல்லவேண்டும்  என்றால்  இந்த   திறமைக்கு  மயங்கி தான்  கவிதா  பாலாவிடம்  காதல்  வயப்பட்டால்..........

வழக்கம்  போல்    பைக்  சீறி  கொண்டு  பறக்கிறது..  கவிதா  பாலாவை  இருக்க  கட்டி  கொண்டு  அவனுக்கு முத்தம்  கொடுத்து  கொண்டு  சிரித்துக்கொண்டே  உடன்  அமர்ந்திருக்கிறாள்....

திடீடீரன்று  ஒரு  சப்தம்...  இவர்கள்  இருவரின்  கண்களிலும்   இருள்  சூழ்ந்தது .........

கன்னாபின்னாவென  இருவரும்  தூக்கி   வீசப்பட்டார்கள்..................

24மணி  நேரத்திற்கு  பிறகு....

கவிதா தனது   கண்களை இப்போது  மெதுவாக  திறக்கின்றாள்....

சுற்றும்  முற்றும்  பார்க்கிறாள்..  தனது  உடம்பெல்லாம்  காயம்...

அது ஒரு  மருத்துவமனை  என்பதை  உணர்கிறாள்....

உடம்பு  முழுக்க வலி....

அம்மாஆஆ   என்ற  முதல்  அலறல் வார்த்தை அவள்  வாயிலிருந்து......

சப்தம்  கேட்டு  வெளியில்  இருந்து  அம்மா  அப்பா  இருவரும்  உள்ளே  வருகின்றனர்......

அவள்  வாயிலிருந்து  வந்த  முதல்  வார்த்தை  பாலா  எங்கே....

அவள்   கேட்ட  கேள்விக்கு  இருவரும்   உறைந்து  போய்  சொல்வதுஅறியாது  விழிபிதுங்கி  நின்றனர்.......

கவி : சொல்லு  மா  பாலா  எப்படி  இருக்கான்...
அம்மா  : அவன்  அங்கேயே  இறந்துட்டான் மா......

இதை  கேட்ட ட்ட  கவிதாவின்  இதயம்  நின்று  விட்டது.............

இல்ல   அப்படியெல்லாம்  இருக்காது  என்ன  கூப்டு  போங்க  நான்  அவனை  இப்பவே  பாக்கணும்  னு அழுது  புலம்பும்  கவிதாவின்  அலறல்  சத்தம்  அறைமுழுக்க   ஒலித்தது..........

அடுத்த  ஒரு  மாதத்திற்கு  கவிதா  யாரிடமும்  பேசாமல்  நடைப்பிணமாக  இருந்தாள்....

நண்பர்கள்  உறவினர்கள்  பாலாவின்  தாய்  தந்தையர்கள்  அனைவரும்  அவளுக்கு  சமாதானம்  சொல்ல  அவளோ  எதையும்  காதில்  வாங்கிக்கொள்ளாமல்  பாலாவின்  நினைவுகளிலேயே  இருந்தால்...

எவ்வளவு  பெரிய காயத்திற்கும்  காலம்  மட்டுமே  மருந்து....

நாட்கள்  பல உருண்டு  ஓடியது  கவிதா  மெதுவாக  சகஜ நிலைக்கு  திரும்பினாள்.........

ஆனாலும்  தனது  facebok  profile  watsap  dp இரண்டிலும்  பாலாவை  கட்டி   அணைத்து  கொண்டிருக்கும்  புகைப்படமே  இருந்தது...............

அவள்   இப்படியே  இருந்தால்  பைத்தியமாகிவிடுவாள்  என்று  நினைத்து   அப்பா  அவளை  பணிக்கு  செல்ல  அறிவுறுத்தினார்.....

கவிதாவுக்கும்  இது  சரி  என  தோன்றியது..

பணிக்கு  செல்ல  ஆரம்பித்தாள்...

1வருடங்கள்  கடந்தது...

கிட்ட தட்ட   கவிதா  இயல்பு  நிலைக்கு   திரும்பி  அனைவரிடமும்  சகஜமாக  பேசிக்கொண்டிருந்தாள்....

மறுபடியும்  அவள்  முகத்தில்  சிரிப்பு  மலர்ந்தது.....

அன்று  ஒருநாள்  அவள்  பேருந்து  நிலையத்தில்  இருந்து  வீட்டிற்கு  நடந்து வந்துகொண்டிருந்தாள்...

அப்போது  ஒரு பைக்  மின்னல்  வேகத்தில்  இவள்  முன்   ஒரு சக்கரம்  மட்டுமே  தரையில்  இருந்தவாறு  தூக்கி  கொண்டு  வந்து  கவிதாவின்  எதிரே  வந்து  நின்றது...

ஒருவன்  ஸ்டைல்லாக  அதிலிருந்து  இறங்கி  வந்து.....

கவிதா  முன்பு  வந்து  நின்று....

I love u kavithaa   நாம  கல்யாணம்  பணிக்கலாமா

என்று  கேட்க..  கவிதாவுக்கு  பகீர்  என்று  ஆகிவிட்டது.....

கண்களில்  தண்ணீர்  குளம்  போல் வடிகிறது....

அழுதுகொண்டே  கீழே  அமர்ந்து  கொண்டால்...

ஏனெனில்  இது  அப்படியே  பாலா  தன்  முன்  வந்து  காதலை  வெளிப்படுத்திய  விதம்..

அதை  அப்படியே  இவன்  செய்யும்போது  அவனுடைய  நினைவுகள்  அவளை  அறியாமலே  பாலா  வசம்  சென்று  விட்டது......

பிறகு  அவன்  சமாதான  படுத்த   கவிதா  அழுது  கொண்டே  வீடு  சென்றால்......

அன்று  இரவு  முழுவதும்  அவள்  கண்ணில்   தூக்கம்  இல்லை...................

பின்னர்  அவன்  அடிக்கடி  கவிதாவை  பின்  தொடர்வதை  அவள்  உணர்ந்தாள்........

அவன் செய்கைகள்  அணைத்தும்  பாலாவை  உணர்த்துவதை  போலவே  இருந்தது.......

ஒரு  நாள் அவன்  கவிதாவின் வீட்டிற்கே  வந்து  விட்டான்...........

அம்மா : யாரு  பா  நீ...
சுரேஷ் : ஆண்ட்டி  என் பேரு  சுரேஷ் 
அம்மா  : சொல்லு  பா..
சுரேஷ் : நான்  சுத்தி  வளச்சு  பேச  விரும்பல  நேர  விஷயத்துக்கு வரன்  நான்  கவிதாவை  விரும்புறேன்  அவளை  கல்யாணம்  பண்ணிக்கணும்  னு ஆசைபடுறேன் உங்க  சம்மதம்  வேணும்.....

இதை  கேட்டு  அம்மா அப்பா  இருவரும்  கவிதாவை  ஆச்சர்யத்துடன்  பார்க்கின்றனர்...

கவிதாவுக்கும்  இது  வியப்பை  ஏற்படுத்தியது...

ஏனெனில்  இது  அப்படியே  பாலா  செய்தது...  அச்சு அசலாக  அதையே  இவனும்  செய்கிறான்..........

அம்மா : அவளுக்கு  சம்மதம்  நா  எங்களுக்கும்  சம்மதம்  தான்  பா..  அவ சந்தோசமா  இருந்தா  அதுவே  எங்களுக்கு  போதும்..
சுரேஷ் : ரொம்ப  தேங்க்ஸ்  ஆண்ட்டி..............

கவிதா : அம்மாஆஆ  வெளிய  போக  சொல்லு  அவனை...

இதை  கேட்ட  அங்க  இருக்க  எல்லாருக்கும்  அதிர்ச்சி  ஆயிடுச்சு .....

கவிதா  அவள்  அறைக்கு  சென்று  கதவை  பூட்டிக்கொள்கிறாள்...

அம்மா  : நீ  ஏதும் தப்பா  எடுத்துக்காத  பா
சுரேஷ் : அய்யோ  அதெல்லாம்  இல்ல  ஆண்ட்டி..... நான்  பாத்துக்குறேன்

சுரேஷ்  அங்கிருந்து  சென்றவுடன்...  அப்பா  அம்மா  இருவரும்  கவிதா  அறைக்கு  சென்று  அழுதுகொண்டிருக்கும்  கவிதாவுக்கு  ஆறுதல்  சொல்கின்றனர்.........

சுரேசை  திருமணம்  செய்து கொண்டு  புதிய  வாழ்க்கையை  தொடங்க   சொல்லி  அறிவுரை  செய்கின்றனர்...

இப்போது  கவிதா  மட்டும் அறையில்  தனியாக  இருக்கிறாள்  ஒரு பக்கம்  சுரேஷ்  பற்றிய  எண்ணங்கள்  இன்னொரு பக்கம்  பாலா  பற்றிய  நினைவுகள்....

பாலாவும்  கவிதாவும்  சேர்ந்து  எடுத்துக்கொண்ட  புகைப்படங்களை  பார்த்து  கண்ணீர்  வடித்துக்கொண்டு  இருக்கிறாள்.............

இப்போது  தனக்கு தானே  பேச  ஆரம்பிக்கிறாள்..

நீ  போன  அப்பவே  நானும்  உன் கூட  வந்துருப்பன் டா......

எனக்கு சாகுற  அளவுக்கு  தைரியம்  இல்ல  டா ...

காலம்  முழுக்க உன்ன மட்டுமே  நெனச்சுக்கிட்டு   உன் நினைவுகள்லயே  வாழ்ந்துறலாம்  னு தான் டா  இருந்தன்...

ஆன  என்ன இவங்க  இருக்க  விடமாட்டாங்க  போல  டா 

சுரேஷ்  என்ன  ரொம்ப  டிஸ்டர்ப்  பன்றான்  டா.........

நா  உயிரா  நெனைச்ச நீயே  போயிட்ட  மத்தவங்க  மாறி  ஒரு  நாள் எனக்கு   புடிச்ச  வாழ்கை  அமையும்  னு என்ன  நானே  சமாதானம்  பண்ணிட்டு உன்ன  விட்டு நான்  மட்டும்  எப்படி  டா  இன்னொருத்தன்  கூட  வாழ்க்கையை  ஆரம்பிக்கிறது.......

எனக்கு  நீ  மட்டும்  தான்  வேணும் .........

ஒரு  வேல நானும்   செத்துட்டா  உன்ன     உன்  கூட  சேந்துறலாம்  னு தோணுது  டா.........

நீ அங்க இருப்பென்ற  நம்பிக்கை  ல நானும்  வரன்  டா....

ப்ளீஸ்  என்ன  ஏமாத்திராத பாலா....

மறுநாள் வெகு  நேரம்  ஆகியும்  கவிதாவின்  அறைக்கதவு  திறக்காமல்  இருந்ததால்  சந்தேக  பட்டு  அப்பா  அறையினுள்  செல்கிறார்.....

கவிதா   இருக்கும்  நிலையை  உணர்த்த  அவர்  இருவரும்  சொர்கம்  சென்று  சேர்ந்து  விட்டனர்  என்று   கண்ணீர்  வடிக்கிறார்

*_{தனிமையின் தோழன்.} ©®™[JawSaN]_*

Post a Comment

Previous Post Next Post